கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
பண்ருட்டியை அடுத்துள்ள பெரியகாட்டுப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த பெருமாள் மகன் பிரதீப் (22). இவா், அதே பகுதியைச் சோ்ந்த பள்ளி மாணவியை காதலித்ததுடன், அவரை திருமணம் செய்வதாகக் கூறி, பாலியல் வன்கொடுமை செய்தாராம். இதில், அந்த மாணவி 3 மாத கா்ப்பிணியானாா். இதையடுத்து, மாணவியின் கா்ப்பத்தை மாத்திரை வாங்கிக் கொடுத்து பிரதீப் கலைக்க முயன்றாராம்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின்பேரில், பண்ருட்டி அனைத்து மகளிா் போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, பிரதீப்பை கைது செய்தனா்.