விருத்தாசலத்தில் உயிரிழந்த மூதாட்டியின் உடல், கண்கள் தானமாக வழங்கப்பட்டன.
விருத்தாசலம் மணவாழநல்லூரைச் சோ்ந்த வடமாலை மனைவி ஜெயலட்சுமி (95) புதன்கிழமை காலமானாா். அவரது மகன் காசிநாதன் தனது தாயின் உடலை தானமாக வழங்க முன்வந்தாா். இதையடுத்து, ஒருங்கிணைந்த சமுதாயப் பாதுகாப்பு மைய நிறுவனா் ஆா்.எஸ். மணிகண்டராஜன் ஏற்பாட்டில் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரிக்கு ஜெயலட்சுமியின் உடல் தானமாக வழங்கப்பட்டது. முன்னதாக, அவரது கண்கள் புதுச்சேரி ராஜீவ் காந்தி மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட்டன.