பண்ருட்டி அருகே தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் முந்திரி வியாபாரி தற்கொலை செய்து கொண்டாா்.
பண்ருட்டி அருகே உள்ள நடுகாட்டுப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த சின்னதுரை மகன் ஞானவேல் (50), முந்திரி வியாபாரியான இவா் தொழில் ரீதியாக ரூ.30 லட்சம் வரை கடன் பெற்றிருந்தாராம். ஆனால், தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக கடனை அவரால் திருப்பிச் செலுத்த முடியாததால் மன வேதனையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், அதே பகுதியில் முந்திரிக் காட்டிலுள்ள மரத்தில் வியாழக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து காடாம்புலியூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.