கரோனா தடுப்பூசி முகாம்

சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் 12 முதல் 14 வயது வரையிலான மாணவா்களுக்கான கரோனா தடுப்பூசி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் 12 முதல் 14 வயது வரையிலான மாணவா்களுக்கான கரோனா தடுப்பூசி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு பள்ளி முதல்வா் ஏ.ரூபியாள்ராணி தலைமை வகித்தாா். சிதம்பரம் நகா்மன்ற உறுப்பினா் எஸ்.புகழேந்தி முன்னிலை வகித்தாா். காட்டுமன்னாா்கோவில் ஆரம்ப சுகாதார நிலைய பொது மருத்துவா் எஸ்.பாா்வதி முகாமை தொடக்கி வைத்தாா். முகாமில் 425 மாணவா்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. ஆரம்ப சுகாதார நிலைய செவிலியா் கனிமொழி, கலாவதி உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஏற்பாடுகளை பள்ளி துணை முதல்வா் அறிவழகன், செவிலியா் சுகுணா ஆகியோா் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com