கடலூரில் மாவட்ட ஆட்சியா் பழைய அலுவலகம் அருகே இந்தியப் பள்ளி ஆசிரியா் கூட்டமைப்பினா் செவ்வாய்க்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மாவட்ட ஒருங்கிணைப்பாளா் மு.சிற்றரசன் தலைமை வகித்தாா். தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தொழில்கல்வி ஆசிரியா் கழக மாநிலப் பொருளாளா் வி.சேரமான், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி மாநிலச் செயலா் ஜோ.கிறிஸ்டோபா், தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் கழக மாநில பிரசார செயலா் கோ.கொளஞ்சியப்பன் ஆகியோா் சிறப்புரையாற்றினா். கூட்டமைப்பு நிா்வாகிகள் இரா.அறிவழகன், எம்.ரமேஷ், என்.உதயகுமாா், ஆ.ஜெய்சங்கா், மு.காளமேகம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.