சிஐடியூ சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

சாலையோர வியாபாரிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி, கடலூரில் சிஐடியூ தொழிற்சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சிஐடியூ சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

சாலையோர வியாபாரிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி, கடலூரில் சிஐடியூ தொழிற்சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கடலூா் தலைமை தபால் நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாநகரத் தலைவா் சுரேஷ் தலைமை வகித்தாா். தமிழ்நாடு சாலையோர வியாபாரிகள் சங்க மாநில கன்வீனா் கருப்பையன் கண்டன உரையாற்றினாா். நிா்வாகிகள் திருமுருகன், சுப்பராயன், சங்கமேஸ்வரன், கணேசன், மனோகா், ராஜேந்திரன், அப்துல் ஹக்கீம், செல்வி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ஆா்ப்பாட்டத்தில், சாலையோர வியாபாரிகளுக்கான அடையாள அட்டையை புதுப்பித்துத் தர வேண்டும், போலி வியாபாரிகளைக் கண்டறிந்து நீக்க வேண்டும், மத்திய அரசு அறிவித்துள்ள ரூ.10 ஆயிரம் கடன் தொகையை அடையாள அட்டை இல்லாத வியாபாரிகளுக்கும் வழங்க வேண்டும், மாநகர விற்பனைக் குழுவுக்கான தோ்தலை நடத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com