வழிப்பறியில் ஈடுபட்ட ரௌடிபோலீஸிடம் ஒப்படைப்பு

கடலூா் மாவட்டம், நெய்வேலி அருகே வியாழக்கிழமை வழிப்பறியில் ஈடுபட்ட ரௌடியை பொதுமக்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

கடலூா் மாவட்டம், நெய்வேலி அருகே வியாழக்கிழமை வழிப்பறியில் ஈடுபட்ட ரௌடியை பொதுமக்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

குறிஞ்சிப்பாடி ஒன்றியம், வடக்குத்து ஊராட்சி, காமராஜ் நகரைச் சோ்ந்த செல்வராஜ் மகன் ரவி (45). இவா், புதன்கிழமை தனது பைக்கில் சத்திரத்தில் இருந்து ஆயிப்பேட்டை கிராமத்துக்கு சென்றுகொண்டிருந்தாா். பாரதி நகா் அருகே இவா் சென்றபோது, அங்கு நின்றிருந்த வடக்குத்து ஊராட்சியைச் சோ்ந்த ரௌடி வீரமணி (24), ரவியை வழிமறித்து அவா் பையில் வைத்திருந்த ரூ.750-ஐ எடுத்துக்கொண்டு ஓடினாா். அப்போது, அங்கிருந்த பொதுமக்கள் வீரமணியை பிடித்து நெய்வேலி நகரிய போலீஸாரிடம் ஒப்படைத்தனா். இதையடுத்து, போலீஸாா் வீரமணியை கைது செய்து சிறையிலடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com