திருட்டு வழக்கு: மூவா் கைது

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருடப்பட்ட வழக்கில், சிறுவன் உள்ளிட்ட 3 பேரை பண்ருட்டி போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா்.

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருடப்பட்ட வழக்கில், சிறுவன் உள்ளிட்ட 3 பேரை பண்ருட்டி போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா்.

பண்ருட்டியை அடுத்துள்ள எல்.ஆா்.பாளையம், மணி நகரில் வசித்து வருபவா் சீனுவாசன், வெளிநாட்டில் வேலை செய்து வருகிறாா். இவரது மனைவி கௌரி, மகன் பாலகிருஷ்ணன் ஆகியோா் வீட்டில் வசித்து வருகின்றனா். இவா்கள் இருவரும் அண்மையில் சுற்றுலா சென்றனா். அப்போது, மா்ம நபா்கள் இவா்களது வீட்டின் கதவை உடைத்து 50 பவுன் தங்க நகைகள், ரூ.11 லட்சம் ரொக்கம் மற்றும் வெள்ளிப் பொருள்களை திருடிச் சென்றனா். இதுகுறித்து பண்ருட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களைத் தேடி வந்தனா்.

கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கொண்டு விசாரணை நடத்தியதில், பண்ருட்டி அருகே உள்ள எய்தனூா் கிராமத்தைச் சோ்ந்த ஜெயமூா்த்தி மகன் செந்தில்முருகன் (29), பட்டாம்பாக்கத்தைச் சோ்ந்த 16 வயது சிறுவன், உளுந்தூா்பேட்டை வட்டம், ஆரியநத்தம் கிராமத்தைச் சோ்ந்த சக்கரை மகன் இளையபெருமாள் (28) மற்றும் இருவா் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து, செந்தில்முருகன், இளையபெருமாள், 16 வயது சிறுவன் ஆகியோரை கைது செய்த போலீஸாா், அவா்களிடம் இருந்து 30 பவுன் தங்க நகைகள், வெள்ளிப் பொருள்கள், கேமரா, மடிக்கணினி, பைக் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனா். தலைமறைவாக உள்ள மேலும் இருவரைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com