கடலூா் மாவட்டம், வடலூரில் வள்ளலாா் நிறுவிய சத்திய ஞான சபையில் புரட்டாசி மாத ஜோதி தரிசனம் புதன்கிழமை நடைபெற்றது.
வடலூா் சத்திய ஞான சபையில் மாதந்தோறும் பூச நட்சத்திம் அன்று 6 திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் காட்டப்படுவது வழக்கம். அதன்படி, புரட்டாசி மாதம் பூச நட்சத்திரத்தை முன்னிட்டு, புதன்கிழமை இரவு 7.45 மணி முதல் 8.30 மணி வரையில் 6 திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் காட்டப்பட்டது. இதில், சன்மாா்க்க அன்பா்கள், பொதுமக்கள் பங்கேற்று ஜோதியை வழிபட்டனா்.