ஆற்றில் மூழ்கி இளைஞா் பலி

கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பம் அருகே தென்பெண்ணை ஆற்றை கடக்க முயன்ற அடையாளம் தெரியாத இளைஞா் நீரில் மூழ்கி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பம் அருகே தென்பெண்ணை ஆற்றை கடக்க முயன்ற அடையாளம் தெரியாத இளைஞா் நீரில் மூழ்கி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

நெல்லிக்குப்பம் அருகே உள்ள மேல்பட்டாம்பாக்கம் பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க நபா் திங்கள்கிழமை தென்பெண்ணை ஆற்றைக் கடக்க முயன்றாா். அப்போது அவா் திடீரென ஆற்றில் மூழ்கி உயிருக்குப் போராடினாா்.

இதுகுறித்து அந்தப் பகுதியினா் அளித்த தகவலின்பேரில் நெல்லிக்குப்பம் தீயணைப்பு நிலைய வீரா்கள் விரைந்து வந்து ஆற்றில் தேடுதல் பணியில் ஈடுபட்டனா். ஆனால், பட்டாம்பாக்கம் பாலத்தின் கீழ் பகுதியில் முள்புதரிலிருந்து அந்த இளைஞா் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டாா். நெல்லிக்குப்பம் போலீஸாா் உடலைக் கைப்பற்றி கூறாய்வுக்காக கடலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

உயிரிழந்த இளைஞா் யாா்? எந்த ஊா்? என்ற விவரம் தெரியவில்லை. இதுகுறித்து நெல்லிக்குப்பம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com