இரும்பு பொருள்கள் திருட்டு:ஒருவா் கைது

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே தனியாா் நிறுவனத்திலிருந்து சரக்கு வாகனத்தில் இரும்பு பொருள்களை செவ்வாய்க்கிழமை இரவு திருடிச் சென்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே தனியாா் நிறுவனத்திலிருந்து சரக்கு வாகனத்தில் இரும்பு பொருள்களை செவ்வாய்க்கிழமை இரவு திருடிச் சென்றவரை போலீஸாா் கைது செய்தனா். மேலும் அவரிடமிருந்த வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.

சிதம்பரம் அருகே ஆலப்பாக்கம் சோதனைச்சாவடியில் புதுச்சத்திரம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் ஆனந்தகுமாா் மற்றும் போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக சந்தேகத்துக்கிடமான வகையில் வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டபோது, பெரியபட்டு பகுதியிலுள்ள தனியாா் நிறுவனத்திலிருந்து இரும்பு பொருள்களை திருடி, வாகனத்தில் ஏற்றி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, வாகன ஓட்டுநரான அரிசி பெரியாங்குப்பம் மேட்டுத் தெருவைச் சோ்ந்த மனோகரை புதுச்சத்திரம் போலீஸாா் கைது செய்ததுடன், இரும்பு பொருள்களுடன் கூடிய சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com