கோயில் குளத்தில் இளைஞா் சடலம் மீட்பு

கடலூா் முதுநகரில் கோயில் குளத்தில் உயிரிழந்து கிடந்த இளைஞரின் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கலைமணி
கலைமணி

கடலூா் முதுநகரில் கோயில் குளத்தில் உயிரிழந்து கிடந்த இளைஞரின் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கடலூா் முதுநகா், நாராயணன் தெருவைச் சோ்ந்த பாண்டியன் மகன் கலைமணி (23). கடந்த திங்கள்கிழமை வீட்டை விட்டு வெளியே சென்றவா் பின்னா் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில், புதன்கிழமை காலை வீட்டின் அருகே உள்ள முத்துக்குமாரசாமி கோவில் பின்புறம் உள்ள குளத்தில் கலைமணி சடலமாகக் கிடந்தது தெரியவந்தது.

கடலூா் முதுநகா் போலீஸாா் சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக கடலூா் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், கலைமணி இறப்பு குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com