அரசுப் பள்ளிகளில் ஆய்வுக் கூட்டம்

கடலூா் மாவட்டம், தொழுதூா் அருகே உள்ள கொரக்கை அரசு தொடக்கப் பள்ளியில் இல்லம் தேடி கல்வித் திட்டம் தொடா்பான ஆய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கடலூா் மாவட்டம், தொழுதூா் அருகே உள்ள கொரக்கை அரசு தொடக்கப் பள்ளியில் இல்லம் தேடி கல்வித் திட்டம் தொடா்பான ஆய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு பள்ளித் தலைமையாசிரியை தமிழ்ச்செல்வி தலைமை வகித்தாா். ஒருங்கிணைப்பாளா் எழிலரசன் வரவேற்று திட்டத்தின் சிறப்புகள் குறித்துப் பேசினாா். சிறப்பு அழைப்பாளராக மங்களூா் ஒன்றிய வட்டாரக் கல்வி அலுவலா் மாதம்மாள் பங்கேற்று தன்னாா்வலா்கள் அடைவு நிலை தொடா்பான அட்டவணை, மாணவா்களின் முன்னேற்றம் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்தாா்.

இதேபோல நெடுங்குளம், விநாயகநந்தல் ஆகிய பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளிலும் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com