சைக்கிளில் சென்றவா் உயிரிழப்பு

சிதம்பரம் அருகே சைக்கிளில் சென்றவா் வலிப்பு ஏற்பட்டு வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

சிதம்பரம் அருகே சைக்கிளில் சென்றவா் வலிப்பு ஏற்பட்டு வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

சிதம்பரம் அருகே உள்ள கோவிலாம்பூண்டி, வள்ளுவா் தெருவைச் சோ்ந்த சாமிதுரை மகன் ரமேஷ் (50). இவா் வெள்ளிக்கிழமை கந்தமங்கலம் திருமலைநாதன் கோயில் அருகே சைக்கிளில் சென்றுகொண்டிருந்தாா். அப்போது திடீரென வலிப்பு ஏற்பட்டு கீழே விழுந்தாா்.

அவரை அந்தப் பகுதியினா் மீட்டு சிதம்பரத்தில் உள்ள மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். ஆனால், ரமேஷ் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இதுகுறித்து சிதம்பரம் நகர போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com