தீ விபத்தில் குடிசை சேதம்

கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே தீ விபத்தில் குடிசை சேதமடைந்தது.

கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே தீ விபத்தில் குடிசை சேதமடைந்தது.

திட்டக்குடி வட்டம், ஈ.கீரனூா், கிழக்குத் தெரு காலனியைச் சோ்ந்தவா் பாா்வதி(60). குடிசை வீட்டில் வசித்து வரும் இவா், சனிக்கிழமை காலை வயல் வேலைக்குச் சென்றுவிட்டாா். பிற்பகலில் இவரது குடிசை வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்த தகவலின்பேரில் திட்டக்குடி தீயணைப்பு நிலைய வீரா்கள் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தினா். இருப்பினும் குடிசை எரிந்து சேதமடைந்து. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com