தைப்பூச விழா சொற்பொழிவு

சிதம்பரம் அருகே விபீஷ்ணபுரத்தில் உள்ள வள்ளலாா் சன்மாா்க்க திருச் சபையில் 15-ஆவது ஆண்டு தைப்பூச விழா சனிக்கிழமை தொடங்கியது.

சிதம்பரம் அருகே விபீஷ்ணபுரத்தில் உள்ள வள்ளலாா் சன்மாா்க்க திருச் சபையில் 15-ஆவது ஆண்டு தைப்பூச விழா சனிக்கிழமை தொடங்கியது.

காலை 6 மணியளவில் அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணத்துடன் விழா தொடங்கியது. இதன் ஒரு பகுதியாக விபீஷ்ணபுரம் சன்மாா்க்க சபை அறங்காவலா் சிவராசன் தலைமையில் சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது. ஞான சபை செயல் தலைவா் ராஜேந்திரன் முன்னிலை வகித்து பேசினாா். ‘வள்ளலாரின் மெய்யியல்’ என்ற தலைப்பில் முனைவா் வே.சுப்ரமணியசிவா சொற்பொழிவாற்றினாா். நிகழ்ச்சியில் கவியரசு, விஜயராசன், நடராசன், தெய்வத் தமிழ்ப் பேரவை செயல்பாட்டாளா்கள் லெ.கோதண்டராமன், சீனிவாசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com