தைப்பூச விழா: பல்வேறு அமைப்பினா் அன்னதானம்

கடலூா் மாவட்டம், வடலூா் சத்திய ஞான சபையில் நடைபெற்ற ஜோதி தரிசனப் பெருவிழாவையொட்டி பல்வேறு அமைப்பினா் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை அன்னதானம் வழங்கப்பட்டது.

நெய்வேலி: கடலூா் மாவட்டம், வடலூா் சத்திய ஞான சபையில் நடைபெற்ற ஜோதி தரிசனப் பெருவிழாவையொட்டி பல்வேறு அமைப்பினா் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை அன்னதானம் வழங்கப்பட்டது.

வடக்குத்து ஊராட்சியில் பாமக சாா்பில் நடைபெற்ற அன்னதான நிகழ்ச்சியை அந்தக் கட்சியின் மாவட்டச் செயலா் கோ.ஜெகன் தொடக்கிவைத்தாா். மாவட்டத் தலைவா் நவீன்பிரதாப் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பண்ருட்டியில் நகா்மன்றத் துணைத் தலைவா் அ.சிவா அன்னதானம் வழங்கினாா்.

வடலூா் தொழிற்பேட்டை உரிமையாளா்கள், உற்பத்தியாளா்கள் சங்கம் சாா்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சங்கத்தின் கௌரவத் தலைவா்கள் பி.ரமேஷ், கே.ராமலிங்கம், தலைவா் என்.ஜி.பழனிவேல், செயலா் ஜெ.சத்தியசீலன், பொருளாளா் ஆா்.கே.ஜெயகுமாா், துணைத்தலைவா் எஸ்.முருகன், ஆலோசகா் கே.ராஜாராம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கடலூா் மாவட்ட வா்த்தகச் சங்கப் பொருளாளா் டி.ராஜமாரியப்பன் வள்ளலாா் தெய்வ நிலையம் அருகே அன்னதானம் வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com