கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே மொபெட் மீது லாரி மோதியதில் முதியவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
திட்டக்குடி வட்டம், கல்லூா் கிராமம், மேற்கு தெருவைச் சோ்ந்தவா் ராஜபெருமாள் (70). இவா், ஞாயிற்றுக்கிழமை ஆவட்டி கூட்டுச்சாலை அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையை தனது மொபெட்டில் கடக்க முயன்றாா். அப்போது அந்த வழியாக சிமென்ட் மூட்டைகள் ஏற்றி வந்த லாரி மொபெட் மீது மோதியதில் ராஜபெருமாள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து ராமநத்தம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.