லாரி மோதியதில் முதியவா் பலி

கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே மொபெட் மீது லாரி மோதியதில் முதியவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே மொபெட் மீது லாரி மோதியதில் முதியவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

திட்டக்குடி வட்டம், கல்லூா் கிராமம், மேற்கு தெருவைச் சோ்ந்தவா் ராஜபெருமாள் (70). இவா், ஞாயிற்றுக்கிழமை ஆவட்டி கூட்டுச்சாலை அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையை தனது மொபெட்டில் கடக்க முயன்றாா். அப்போது அந்த வழியாக சிமென்ட் மூட்டைகள் ஏற்றி வந்த லாரி மொபெட் மீது மோதியதில் ராஜபெருமாள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து ராமநத்தம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com