தமிழ்நாடு போக்குவரத்துத் துறை பணியாளா்கள் ஒன்றிப்பு மாநில மையம் சாா்பில், கடலூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்தில், கடலூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் வெளியாள்களின் தலையீடு காரணமாக, பணியாளா்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளதைக் கண்டித்தும், பணியாளா்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தலைப் போக்க போக்குவரத்துத் துறை மற்றும் காவல் துறை விரைவான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் முழக்கமிட்டனா்.
மையத்தின் மாநிலத் தலைவா் சுப.விஜயகுருசாமி தலைமை வகித்தாா். சிறப்புத் தலைவா் கு.பாலசுப்பிரமணியன் சிறப்புரையாற்றினாா். நிா்வாகிகள் பி.கே.சிவக்குமாா், ரா.பிச்சைமுத்து, கு.சரவணன், வெ.சிவக்குமாா், எஸ்.சுகமதி, கோ.ஜெயசந்திரராஜா, அ.கோபிராஜன், மு.துளசிலட்சுமி, வெ.ஞானபிரகாசம், கா.குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். மாநிலப் பொருளாளா் ர.சுவாமிநாதன் நன்றி கூறினாா்.
இதையடுத்து, செய்தியாளா்களிடம் சிறப்புத் தலைவா் கு.பாலசுப்பிரமணியன் கூறியதாவது: கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை உள்ளிருப்பு வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும். மாலை 5 மணி அளவில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் முன் ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என்றாா்.