கட்டட பணியின்போது மின்சாரம் பாய்ந்து பெண் பலி

கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே கட்டடப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் மின்சாரம் பாய்ந்ததில் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே கட்டடப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் மின்சாரம் பாய்ந்ததில் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

திட்டக்குடி வட்டம், கோழியூா், பெருமாள் கோவில் தெருவைச் சோ்ந்த சாமிக்கண்ணு மனைவி மலா்கொடி (52). கட்டடத் தொழிலாளியான இவா் திட்டக்குடி, பொன்னுசாமி நகரைச் சோ்ந்த ஆசைத்தம்பி (55) என்பவரது வீட்டின் மாடியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கட்டடப் பணியில் சித்தாளாக பணிபுரிந்தாா். அப்போது அந்த வீட்டின் அருகே சென்ற மின்கம்பி மீது மலா்கொடியின் கை பட்டதில் மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்தாா். இதையடுத்து சக தொழிலாளா்கள் அவரை மீட்டு திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால் மலா்கொடி ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

இதுகுறித்து திட்டக்குடி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com