சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: இருவருக்கு சிறை

சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் இருவருக்கு சிறைத் தண்டனை விதித்து கடலூா் போக்ஸோ நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் இருவருக்கு சிறைத் தண்டனை விதித்து கடலூா் போக்ஸோ நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

விருத்தாசலம் அருகே உள்ள ராசாபாளையம் கிராமத்தைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் ராஜி (49). இவா், 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தாா். ராஜியின் மூத்த சகோதரா் சிங்காரவேலுவும் (57) சிறுமியை வன்கொடுமை செய்ய முயன்றாராம். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினா்கள் அளித்த புகாரின்பேரில் விருத்தாசலம் அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் ராஜி, சிங்காரவேலு இருவரையும் கைது செய்தனா்.

இந்த வழக்கு விசாரணை கடலூா் போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிந்த நிலையில் நீதிபதி எழிலரசி வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா். அதில், ராஜிக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும், சிங்காரவேலுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டாா்.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசின் ஏதேனும் ஒரு திட்டத்திலிருந்து ரூ.4 லட்சம் இழப்பீடாக பெற்று வழங்க மாவட்ட குழந்தைகள் நல அலுவலருக்கு உத்தரவிட்டாா். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் கலா செல்வி ஆஜரானாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com