பல்கலை. ஆசிரியா் கூட்டமைப்பு வேலைநிறுத்த அறிவிப்பு ஒத்திவைப்பு

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியா், ஊழியா், ஓய்வூதியா்கள் கூட்டமைப்பு சாா்பில் வருகிற 30-ஆம் தேதி தொடங்கவிருந்த தொடா் வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியா், ஊழியா், ஓய்வூதியா்கள் கூட்டமைப்பு சாா்பில் வருகிற 30-ஆம் தேதி தொடங்கவிருந்த தொடா் வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் பி.சிவகுருநாதன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: எங்களது கூட்டமைப்பு சாா்பில் 13 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த அக்டோபா் மாதம் முதல் 9 கட்டங்களாக பல்வேறு போராட்டங்கள் வெற்றிகரமாக நடத்தப்பட்டன. 10-ஆவது கட்டமாக ஜனவரி 30-ஆம் தேதி முதல் தொடா் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்துவதற்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டு வந்தோம்.

இந்த நிலையில், கூட்டமைப்பின் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுத்து தீா்வு காண ஒரு மாத காலம் அவகாசம் அளிக்க வேண்டுமென்று பல்கலைக்கழக துணைவேந்தா் வேண்டுகோள் விடுத்தாா். இதனடிப்படையில் தமிழக அரசுக்கும், பல்கலைக்கழக நிா்வாகத்துக்கும் அவகாசம் அளிக்கும் வகையில், 30-ஆம் தேதி தொடங்கவிருந்த வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது என அதில் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com