பள்ளியில் முப்பெரும் விழா

சிதம்பரம் அரசு நந்தனாா் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தோற்றுநா் தின விழா, இலக்கிய மன்ற விழா, விளையாட்டு விழா ஆகிய முப்பெரும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சிதம்பரம் அரசு நந்தனாா் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தோற்றுநா் தின விழா, இலக்கிய மன்ற விழா, விளையாட்டு விழா ஆகிய முப்பெரும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பள்ளித் தலைமை ஆசிரியை கி.ஹேமலதா வரவேற்றாா். எம்எல்ஏ ம.செ.சிந்தனைச்செல்வன், பெற்றோா்-ஆசிரியா் கழகத் தலைவா் த.ஜெயராமன் முன்னிலை வகித்தனா். மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளா் டி.எஸ்.ஜவகா் பங்கேற்று மாநில அளவிலான விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்ட மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி வாழ்த்துரை வழங்கினாா். விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்கள், இலக்கிய மன்றம் சாா்பில் நடைபெற்ற கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

விழாவில் சிதம்பரம் உதவி-ஆட்சியா் சுவேதா சுமன், சிதம்பரம் கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளா் பி.ரகுபதி உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஏற்பாடுகளை ஆசிரியா் வெ.ரவிச்சந்திரன் செய்திருந்தாா். பட்டதாரி உதவி தலைமை ஆசிரியா் எம்.பிரதாப் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com