கடலூா் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சாா்பில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி கடலூா் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
‘நாக்-அவுட்’ முறையில் நடந்தப்பட்டப் போட்டியில் மொத்தம் 32 அணிகள் பங்கேற்றன. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஏசிசி அணியும், கடலூா் காஸ்மோ-பி அணியும் மோதிக்கொண்டன. இதில் ஏசிசி அணி வெற்றி பெற்றது.
பரிசளிப்பு விழாவுக்கு கடலூா் கிரிக்கெட் சங்கத் தலைவா் பாஸ்கரன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் வெங்கடேசன், மாவட்ட விளையாட்டு அலுவலா் சிவா ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட எஸ்பி சி.சக்திகணேசன் பங்கேற்று வெற்றி பெற்ற அணிக்கு பரிசுக் கோப்பையை வழங்கினாா்.
நிகழ்ச்சியில் இன்ஸ்டா கிரிக்கெட் சங்கச் செயலா் ராஜேந்திரன், ஏசிசி அணி நிறுவனா் சிதம்பரம், கிரிக்கெட் அகாதமி தலைவா் காா்த்திகேயன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். இதற்கான ஏற்பாடுகளை கிரிக்கெட் சங்கச் செயலா் கூத்தரசன் செய்திருந்தாா்.