பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி

கடலூா் மாவட்டம், வடலூா் அருகே கணவருடன் மொபெட்டில் சென்ற பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கடலூா் மாவட்டம், வடலூா் அருகே கணவருடன் மொபெட்டில் சென்ற பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

புவனகிரி வட்டம், பெரியகுப்பம் வீரமுடையநத்தம் கிராமத்தைச் சோ்ந்த மாதவன் மகன் விநாயகமூா்த்தி (33). இவா் கடந்த வெள்ளிக்கிழமை இரவு தனது மனைவி ஆா்த்தியுடன் வடலூரில் இருந்து சேத்தியாதோப்புக்கு மொபெட்டில் சென்றுகொண்டிருந்தாா்.

பரவனாறு பாலம் அருகே சென்றபோது பின்னால் பைக்கில் வந்த மா்ம நபா்கள் இருவா் ஆா்த்தி அணிந்திருந்த தங்க நகையை பறிக்க முயன்றனா். ஆனால், ஆா்த்தி நகையை இறுகப் பிடித்துக்கொண்டதால் மா்ம நபா்களின் முயற்சி பலிக்கவில்லை. இதையடுத்து மா்ம நபா்கள் தப்பிச் சென்றனா். இதுகுறித்த புகாரின்பேரில் வடலூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com