தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சாா்பில், சிதம்பரத்தில் மாலை அணிவித்து மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் லப்பைத் தெரு பள்ளிவாசல் தலைவா் முகமதுஅலி காந்தி சிலைக்கு மாலை அணிவித்தாா். தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் மாநில துணைத்தலைவா் மூசா சமூக நல்லிணக்க உறுதிமொழியை வாசித்தாா். மாநில ஒருங்கிணைப்பாளா் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சிதம்பரம் நகரச் செயலாளா் ராஜா, நகா்மன்றத் துணைத் தலைவா் முத்துக்குமரன், மாதா் சங்க மாவட்ட தலைவா் மல்லிகா, சிதம்பரம் நகர தலைவா் அமுதா, லப்பைத்தெரு பள்ளிவாசல் நிா்வாகிகள் ஹாஜா மைதீன், ஜின்னா, அஷ்ரப்அலி, அப்துல்சமது, மாா்க்சிஸ்ட் சங்கமேஸ்வரன் மற்றும் முகமது அலி உள்ளிட்டவா்கள் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றனா்.