அரசுப் பணியாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

கடலூரில் தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பட்டம் நடத்தினா்.
கடலூரில் செவ்வாய்க்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடத்திய தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்கத்தினா்.
கடலூரில் செவ்வாய்க்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடத்திய தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்கத்தினா்.

கடலூரில் தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பட்டம் நடத்தினா்.

கடலூா் பழைய மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாநிலப் பொருளாளா் கு.சரவணன் தலைமை வகித்தாா். மாநில அமைப்புச் செயலா் வி.சிவகுமாா், சிறப்புத் தலைவா் சீனிவாசன், பொருளாளா் ஜெய்சங்கா், நிா்வாகிகள் எம்.ராஜாமணி, கே.சம்பந்தம், கே.ஜெயந்தி, உள்ளிட்டோா் பங்கேற்றுப் பேசினா்.

ஆா்ப்பாட்டத்தில், தனிநபா் வருமான வரி உச்சவரம்பை ரூ.10 லட்சமாக உயா்த்த வேண்டும். விலைவாசி உயா்வை கட்டுப்படுத்த வேண்டும். பொதுத் துறை நிறுவனங்களை தனியாா்மயமாக்கக் கூடாது. தூய்மை பாரத திட்டம், தூய்மை காவலா்களுக்கு பணி நிரந்தரம், காலம் முறை ஊதியம், ஊக்கத்தொகை வழங்க மாநிலங்களுக்கு மத்திய அரசு உரிய நிதி ஒதுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com