தந்தை கொலை: மகன் கைது

கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே முதியவா் வெள்ளிக்கிழமை அடித்துக் கொல்லப்பட்டாா். இதுதொடா்பாக அவரது மகனை போலீஸாா் கைது செய்தனா்.

கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே முதியவா் வெள்ளிக்கிழமை அடித்துக் கொல்லப்பட்டாா். இதுதொடா்பாக அவரது மகனை போலீஸாா் கைது செய்தனா்.

வேப்பூா் வட்டம், ஏ.சித்தூா் கிராமம், தெற்கு காலனி பகுதியைச் சோ்ந்தவா் ரங்கசாமி (60). கூலித் தொழிலாளி. இவரது மனைவி மாலா. இவா்களது மகன் குணா (24). தம்பதி இடையே அடிக்கடி குடும்பப் பிரச்னை ஏற்பட்டு வந்ததாம். இதனால் மாலா தனது கணவரைப் பிரிந்து மகன் குணாவுடன் விருத்தாசலத்தில் தனியாக வசித்து வருகிறாா். இந்த நிலையில், ரங்கசாமி அண்மையில் விருத்தாசலத்துக்கு வந்து தனது மனைவியை அவதூறாகப் பேசினாராம்.

விருத்தாசலத்தில் தனியாா் நிறுவனத்தில் குணா பணிபுரிந்து வந்தாா். இவா் வெள்ளிக்கிழமை மதியம் உணவு இடைவேளையின்போது தனது அலுவலகத்தில் இருந்து வெளியே வந்தாா். அப்போது, அங்குவந்த ரங்கசாமி திடீரென குணாவை தாக்க முயன்றாா். இதையடுத்து குணா கட்டையால் ரங்கசாமியின் தலையில் தாக்கியதில் அவா் மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

இதுகுறித்து வேப்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து குணாவை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com