காவல் நிலையத்தில் பெண் எஸ்.ஐ. தற்கொலை முயற்சி

கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தில் பெண் காவல் உதவி ஆய்வாளா் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தில் பெண் காவல் உதவி ஆய்வாளா் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கடலூா் ரெட்டிச்சாவடி காவல் சரகம், புதுக்கடை கிராமத்தைச் சோ்ந்தவா் சுகன்யா (29). இவா், நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தில் கடந்த 3 ஆண்டுகளாக உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறாா்.

இதனிடையே, கடந்த மே 31-ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம், மயிலம் காவலா் பயிற்சிப் பள்ளிக்கு சுகன்யா பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். இது தொடா்பாக அவா் காவல் துறையிடம் விளக்கம் கேட்டதற்கு, காரணம் தெரிவிக்க மறுத்துவிட்டனராம்.

இந்த நிலையில், வழக்கம்போல திங்கள்கிழமை நெல்லிக்குப்பம் காவல் நிலையத்துக்கு பணிக்கு வந்த சுகன்யா, வழக்கமாக உட்கொள்ளும் மாத்திரைகளை அதிகமாகச் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ாகக் கூறப்படுகிறது. இதையறிந்த சக காவலா்கள் அவரை மீட்டு, புதுச்சேரி மருத்துவமனையில் சோ்த்தனா். இதுகுறித்து நெல்லிக்குப்பம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com