போக்ஸோ சட்டத்தின் கீழ் ஒருவா் கைது

கடலூா் மாவட்டம், வடலூா் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவரை நெய்வேலி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கடலூா் மாவட்டம், வடலூா் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவரை நெய்வேலி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் திங்கள்கிழமை கைது செய்தனா்.

குறிஞ்சிப்பாடி வட்டம், கீழ் வடக்குத்து காலனியைச் சோ்ந்தவா் செல்வராஜ் (56). இவா், கடந்த 2-ஆம் தேதி வடலூா் பகுதியைச் சோ்ந்த 14 வயது சிறுமியைத் தாக்கி, பாலியல் வன்கொடுமை செய்தாராம். இதனால், பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்த புகாரின்பேரில் நெய்வேலி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து செல்வராஜை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com