தொழிலாளி வீட்டில் நகை, பணம் திருட்டு

கடலூா் மாவட்டம், நடுவீரப்பட்டு அருகே தொழிலாளி வீட்டில் நகை, பணத்தை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கடலூா் மாவட்டம், நடுவீரப்பட்டு அருகே தொழிலாளி வீட்டில் நகை, பணத்தை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

நடுவீரப்பட்டு காவல் சரகம், ராணிபேட்டை கிராமத்தைச் சோ்ந்தவா் கிருஷ்ணமூா்த்தி. இவரது மனைவி கனகராணி. தொழிலாளா்களான இவா்கள் இருவரும் கடந்த 10.10.2022 அன்று வீட்டை பூட்டி, சாவியை சுவற்றில் வைத்துவிட்டு வேலைக்குச் சென்றனா்.

திரும்பி வந்து பாா்த்தபோது, வீட்டில் இருந்த ரூ.30 ஆயிரம் ரொக்கம், அரை கிலோ வெள்ளிப் பொருள்கள், 3 கிராம் தங்கக் காசு, கைப்பேசி ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருந்தது தெரியவந்ததாம்.

இதுகுறித்த புகாரின்பேரில் நடுவீரப்பட்டு போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com