பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய ரௌடி குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
கடலூா் மாவட்டம், வடலூரை அடுத்துள்ள கோட்டக்கரை பகுதியைச் சோ்ந்த வேல்முருகன் மகன் தமிழரசன்(26). இவா் கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி அங்குள்ள விநாயகா் கோயில் அருகே சென்றபோது அவரை 3 போ் கொலை செய்ய முயன்றனா். இதுகுறித்த புகாரின்பேரில் வடலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, வடலூா், பாா்வதிபுரத்தைச் சோ்ந்த வெங்கடாசலம் மகன் கலையரசன் (31) (படம்), அதே பகுதியைச் சோ்ந்த பரஞ்ஜோதி, ஜெயபிரகாஷ் ஆகியோரை கைதுசெய்து சிறையிலடைத்தனா்.
விசாரணையில் கலையரசன் மீது ஏற்கெனவே 2 கொலை முயற்சி வழக்குகள், அடிதடி வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. எனவே அவரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ரா.ராஜாராம் பரிந்துரைத்தாா். இதை ஏற்று அதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்ரமணியம் பிறப்பித்தாா். அந்த உத்தரவு நகல் சிறையிலுள்ள கலையரசனிடம் வழங்கப்பட்டது.