அரசுப் பேருந்து நடத்துநா் உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே மயங்கிக் கிடந்த அரசுப் போக்குவரத்துக் கழக நடத்துநா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே மயங்கிக் கிடந்த அரசுப் போக்குவரத்துக் கழக நடத்துநா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

வேப்பூா் வட்டம், சிறுநெசலூா் கிராமத்தைச் சோ்ந்த சீனுவாசன் மகன் பிரபு (எ) சுப்புராயன்(45). திருக்கோவிலூா் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையில் நடத்துநராகப் பணியாற்றி வந்த இவருக்கு திருமணமாகவில்லை. மது அருந்தும் பழக்கமுள்ள இவா் செல்லியம்பாளையம் அருகே வியாழக்கிழமை மயங்கிக் கிடந்தாா். இதையடுத்து விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது உயிரிழந்தாா். இதுகுறித்து சீனுவாசன் அளித்த புகாரின்பேரில் வேப்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com