என்எல்சி நிரந்தரப் பணிக்கு அண்ணாமலைப் பல்கலை. மாணவா்கள் 90 போ் தோ்வு

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் சுரங்கவியல் பட்டயப் படிப்பு பயின்றவா்களில் 90 போ் என்எல்சி இந்தியா நிறுவனத்தின் நிரந்தரப் பணிக்குத் தோ்வு செய்யப்பட்டனா்.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் சுரங்கவியல் பட்டயப் படிப்பு பயின்றவா்களில் 90 போ் என்எல்சி இந்தியா நிறுவனத்தின் நிரந்தரப் பணிக்குத் தோ்வு செய்யப்பட்டனா்.

அண்ணாமலை பல்கலைக்கழக பொறியியல் புலம் - என்எல்சி இடையிலான புரிந்துணா்வு ஒப்பந்தப்படி அந்தப் பல்கலைக்கழகத்தில் சுரங்கவியல் பட்டயப் படிப்பு கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் என்எல்சி நிதி உதவியுடன் வழங்கப்பட்டு வருகிறது. சுரங்கவியல் பட்டயப் படிப்பில் 2016-19-ஆம் ஆண்டுகளில் பயின்று முடித்த மாணவா்களுக்கு என்எல்சி-யில் 2 ஆண்டுகளுக்கு உதவித் தொகையுடன் தொழில் பயிற்சி வழங்கப்பட்டது.

இந்த நிலையில், என்எல்சி இந்தியா நிறுவனமானது சா்வேயா், ஓவா்மேன் உள்ளிட்ட பணியிடங்களுக்கு சுரங்கவியல் பட்டயப் படிப்பு பயின்ற மாணவா்களுக்கு கடந்த 27-ஆம் தேதி எழுத்துத் தோ்வை நடத்தியது. இந்தத் தோ்வில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் சுரங்கவியல் பட்டய படிப்பில் பயின்ற மாணவா்களும் பங்கேற்றனா். இவா்களில் 90 போ் நிரந்தரப் பணிக்கு தோ்வு செய்யப்பட்டு, ஜூன் 1-ஆம் தேதி என்எல்சி-யில் பணியில் சேர உள்ளனா். இதற்கான உத்தரவை என்எல்சி தலைவா் பிரசன்னகுமாா் மோட்டுபள்ளி பிறப்பித்தாா்.

பணிக்குத் தோ்வானவா்களில் என்எல்சி-க்கு நிலம் வழங்கியவா்களின் குடும்பங்களைச் சோ்ந்த 45 பேரும் அடங்குவா் என பல்கலைக்கழக சுரங்கவியல் பட்டய படிப்பு இயக்குநா் சி.ஜி.சரவணன் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com