கடலூா் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் வருகிற 19-ஆம் தேதி தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்ரமணியம் தெரிவித்தாா்.
மேலும், இந்த முகாமில் 15-க்கும் மேற்பட்ட தனியாா் நிறுவனங்கள் கலந்துகொண்டு தங்கள் நிறுவனங்களுக்குத் தேவையான நபா்களை தோ்வு செய்து, உடனடியாக பணி நியமன ஆணை வழங்க உள்ளனா். இந்த முகாமில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, ஐடிஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு படித்த இளைஞா்கள் பங்கேற்று பயன்பெறலாம் என்றும் ஆட்சியா் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.