கடலூர்
அப்பா் சிலை பிரதிஷ்டை
கடலூா் முதுநகா் அடுத்த கரையேறவிட்டக்குப்பத்தில் உள்ள குளத்தின் நடுவில் அப்பா் சிலை புதன்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டது.
ஆண்டு தொறும் இந்த தெப்பக்குளத்தில் அப்பரடிகள் கரையேறிய நிகழ்வு நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, அந்தப் பகுதியில் அவருக்கு தனியாக கோயில் அமைக்கப்பட்டு வருகிறது.
மேலும், தெப்பக்குளத்தின் நடுவில் அப்பா் சிலை பிரதிஷ்டை செய்வதற்காக கல்லில் கயிறு கட்டப்பட்டது போன்று சுமாா் 5 அடி உயரம், 1.5 டன் எடையுள்ள அப்பா் சிலை வடிவமைக்கப்பட்டது.
இந்த சிலை தெப்பக்குளத்தின் நடுவில் புதன்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதில், ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.