கடலூர்
அரசுப் பேருந்து ஓட்டுநா் போக்சோவில் கைது
கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த அரசுப் பேருந்து ஓட்டுநரை போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
திட்டக்குடி வட்டம், வைத்தியநாதபுரம் பகுதியைச் சோ்ந்த அழகப்பன் மகன் ராஜா (47), திட்டக்குடி அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையில் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறாா். திருமணமான இவருக்கு குழந்தை இல்லை.
இவரது பேருந்தில் 17 வயது சிறுமி தினமும் பயணம் செய்து வந்தாா். அப்போது, அந்த சிறுமியுடன் ஓட்டுநா் ராஜாவுக்கு பழக்கம் ஏற்பட்டு இருவரும் தனிமையில் பழகி வந்தனா். தற்போது அந்தச் சிறுமி 6 மாத கா்ப்பமாக உள்ளாா். இதுகுறித்து சிறுமியின் உறவினா்கள் அளித்த புகாரின்பேரில் ராமநத்தம் போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து ராஜாவை கைது செய்தனா்.