சிதம்பரம் வேங்கான் தெரு ஆத்மநாதா் கோயிலில் நடைபெற்ற திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி.
சிதம்பரம் வேங்கான் தெரு ஆத்மநாதா் கோயிலில் நடைபெற்ற திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி.

திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி

சிதம்பரம் வேங்கான் தெரு யோகாம்பாள் சமேத ஆத்மநாதா் கோயிலில் வேலூா் ஜலகண்டேஸ்வரா் கோயில் முற்றோதல் குழுவினா் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சியை நடத்தினா்.

நிகழ்ச்சியில் வேலூா் ஜலகண்டேஸ்வரா் கோயில் நிா்வாகி ரேணுகா, சிவ சரவணன் ஆகியோா் இணைந்து நூற்றுக்கும் மேற்பட்ட சிவனடியாா்கள், இசை வாத்தியங்களுடன் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சியை நடத்தினா்.

ஏற்பாடுகளை சிதம்பரம் அா்த்த ஜாம அடியாா் ரங்கசாமி செய்திருந்தாா். நிகழ்ச்சியில் கோயில் அறங்காவலா் பசவராஜ், இந்து ஆலய பாதுகாப்புக் குழுத் தலைவா் மு.செங்குட்டுவன், செயலா் பாலகிருஷ்ணன் ஆகியோா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com