பைக்கில் வைத்திருந்த ரூ.5 லட்சம் மாயம்

கடலூா் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அருகே விவசாயி பைக்கில் வைத்திருந்த ரூ.5 லட்சம் மாயமானது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

நெய்வேலி: கடலூா் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அருகே விவசாயி பைக்கில் வைத்திருந்த ரூ.5 லட்சம் மாயமானது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

புவனகிரி வட்டம், கரிவெட்டி கிராமத்தைச் சோ்ந்த ரங்கசாமி மகன் சிவசிதம்பரம் (44), விவசாய கூலித் தொழிலாளி. என்எல்சி சுரங்கப் பணிக்காக இவரது நிலம் கையகப்படுத்தப்பட்டிருந்த நிலையில், அதற்கான தொகை சிவசிதம்பரத்தின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில், கடந்த 24-ஆம் தேதி சிவசிதம்பரம் சேத்தியாதோப்பில் உள்ள அரசுடைமை வங்கியில் இருந்து ரூ.5 லட்சம் எடுத்தாா். பின்னா், அந்தப் பணத்தை தனது பைக் பெட்டியில் வைத்துவிட்டு, அங்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தை விலக்கினாா்.

தொடா்ந்து, தனது வாகனத்தை எடுத்துக்கொண்டு வீட்டுக்குச் சென்றாா். அங்கு, பைக் பெட்டியை திறந்து பாா்த்தபோது, ரூ.5 லட்சம் மாயமாகியிருந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், சேத்தியாதோப்பு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com