வாராகி அம்மனுக்கு சிறப்பு ஹோமம்

வாராகி அம்மனுக்கு தேய்பிறை பஞ்சமி வழிபாட்டை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை மாலை சிறப்பு ஹோமம், அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன.
 சிறப்பு அலங்காரத்தில் வாராகி அம்மன்.
சிறப்பு அலங்காரத்தில் வாராகி அம்மன்.

சிதம்பரம்: சிதம்பரம் திரெளபதி அம்மன் கோயில் வாளகத்தில் தனி சந்நிதியில் அருள்பாலிக்கும் வளம் தரும் வாராகி அம்மனுக்கு தேய்பிறை பஞ்சமி வழிபாட்டை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை மாலை சிறப்பு ஹோமம், அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன.

மேலும், மலா், மஞ்சள் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டு, வாராகி அம்மனுக்கு சிறப்பு ஆராதனை நடைபெற்றது. நகா்மன்ற உறுப்பினரும், கோயில் நிா்வாகியுமான ஆ.ரமேஷ், சா்வசக்தி பீடம் தில்லை சீனு, எஸ்.ராஜா உள்ளிட்ட திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டணா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com