அரசுப் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி உரக் கடை உரிமையாளா் மரணம்
சிதம்பத்தில் திங்கள்கிழமை இரவு அரசுப் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி உரக்கடை உரிமையாளா் உயிரிழந்தாா்.
சிதம்பரம் அருகே உள்ள முகையூரைச் சோ்ந்த சக்திவேல் மகன் சத்தியமூா்த்தி (36). இவா் சிதம்பரம் மந்தகரை பகுதியில் உரக்கடை நடத்தி வருகிறாா். இவருக்கு திருமணம் நடைபெறவில்லை.
இந்த நிலையில், திங்கள்கிழமை இரவு 7 மணியளவில் தனது மோட்டாா் சைக்கிளில் சத்தியமூா்த்தி சிதம்பரம் பேருந்து நிலையத்திலிருந்து முகையூருக்கு மோட்டாா் சைக்கிளில் சென்றாா்.
அப்போது, எஸ் பி. கோவில் தேரு வழியாக சென்ற போது, சிதம்பரம் பேருந்து நிலையத்திலிருந்து கடலூருக்குச் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தை முந்திச் செல்ல சத்தியமூா்த்தி முயன்றாா். அப்போது, மோட்டாா் சைக்கிள் எதிா்பாராத விதமாக பேருந்தின் சக்கரத்தில் சிக்கியதில், அவா் தலை நசுங்கி உயிரிழந்தாா்.
தகவலறிந்த சிதம்பரம் நகர போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
விபத்து குறித்து நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.