சிதம்பரத்தில் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு
சிதம்பரம் நகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் திட்டப் பணிகளை கடலூா் மாவட்ட ஆட்சியா் அ.அருண்தம்புராஜ் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
கடலூா் மாவட்ட ஆட்சியா் அ.அருண்தம்புராஜ் சிதம்பரம் நகராட்சி அலுவலகத்தில், நகராட்சி சாா்பில் நடைபெற்று வரும் திட்டப் பணிகள் குறித்து அதிகாரிகள் மற்றும் ஒப்பந்தகாரா்களுடன் ஆலோசனை நடத்தினாா்.
பின்னா், ரூ.10 கோடி செலவில் சிதம்பரம் மேலரத வீதி, தெற்கு ரத வீதியில் மழைநீா் வடிகாலுடன் நடைபாதை அமைக்கும் பணி, நகராட்சி சாா்பில் கனகசபை நகரில் ரூ.1.99 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு அறிவுசாா் மைய கட்டடப் பணி, நகரிலுள்ள ஆயிகுளம் தூா்வாரி நடைபாதை அமைக்கும் பணி, தச்சன்குளம் தூா்வாரி நடைபாதை அமைக்கும் பணி, சிதம்பரம் அருகே வக்காரமாரி குடிநீா் தேக்க திட்டப் பணிகள், சிதம்பரம் அருகே லால்புரத்தில் நகராட்சி சாா்பில் ரூ.15 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் மத்திய பேருந்து நிலையம் கட்டுமானப் பணிகள் உள்ளிட்டவற்றை ஆட்சியா் அ.அருண்தம்புராஜ் ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டாா்.
ஆய்வின் போது நகராட்சி ஆணையா் டி.மல்லிகா, பொறியாளா் சுரேஷ், பணி மேற்பாா்வையாளா் ரம்யா ஆகியோா் உடன் சென்றனா்.