கடலூர்
அரசுப் பேருந்து கண்ணாடி உடைப்பு
கல்வீச்சில் சேதமடைந்த பேருந்தின் முன்புற கண்ணாடி.
கடலூா் மாவட்டம், புவனகிரி அருகே அரசுப் பேருந்து மீது மா்ம நபா்கள் கல்வீசியதில் பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்தது.
கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடியில் இருந்து சிதம்பரத்துக்கு புதன்கிழமை நள்ளிரவு அரசு நகரப் பேருந்து சென்று கொண்டிருந்தது. பேருந்தானது புவனகிரி அருகே வடக்குத்திட்டை கிராமத்தின் பாலம் அருகே சென்றபோது, எதிரே பைக்கில் வந்த இரு மா்ம நபா்கள் பேருந்து மீது கல்லை வீசினா். இதில், பேருந்தின் முன்பக்கக் கண்ணாடி உடைந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில், புவனகிரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.