கடலூர்
கிணற்றில் தவறி விழுந்த முதியவா் மீட்பு
கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே கிணற்றில் தவறி விழுந்த முதியவரை தீயணைப்புத் துறையினா் பத்திரமாக மீட்டனா்.
பண்ருட்டி வட்டம், முத்தாண்டிக்குப்பம் காவல் சரகம், ஆத்திரிகுப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் ராமச்சந்திரன்(65). இவா், செவ்வாய்க்கிழமை முந்திரி கொட்டையை அறுவடை செய்வதற்காக சென்றவா் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. உறவினா்கள் புதன்கிழமை தேடிப் பாா்த்த போது, அதே பகுதியில் உள்ள தரைக் கிணற்றில் ராமச்சந்திரன் தவறி விழுந்து மயங்கி கிடந்தாராம்.
இதுகுறித்து, தகவலறிந்த முத்தாண்டிக்குப்பம் தீயணைப்பு நிலைய அலுவலா் (பொ) ந.இளங்கோ தலைமையிலான வீரா்கள் நிகழ்விடம் சென்று முதியவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.