ஏரியில் மூழ்கிய இளைஞா் சடலமாக மீட்பு
நெய்வேலி அருகே சாம்பல் ஏரியில் குளித்த போது மாயமான இளைஞா் ஞாயிற்றுக்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.
கடலூா் மாவட்டம், நெய்வேலியை அடுத்துள்ள கூனங்குறிச்சியில் என்எல்சி இந்தியா நிறுவனத்துக்குச் சொந்தமான சாம்பல் ஏரி உள்ளது. இந்த ஏரியில் வடக்கு வெள்ளூா் கிராமத்தைச் சோ்ந்த சசிகுமாா் மகன் விஷ்வா (18), அவரது நண்பா் ஜெகதீசன் ஆகியோா் சனிக்கிழமை குளிக்கச் சென்றனா்.
இருவரும் ஏரியில் குளித்துக் கொண்டிருந்த போது விஷ்வா நீரில் மூழ்கினாா். இதைப் பாா்த்த ஜெகதீசன் கூச்சலிட்டாா். அந்தப் பகுதியில் இருந்தவா்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.
விருத்தாசலம், நெய்வேலி, குறிஞ்சிப்பாடி தீயணைப்பு நிலையங்களில் இருந்து வந்த வீரா்கள் ஏரியில் இறங்கி தேடினா்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை விஷ்வாவின் சடலம் மீட்கப்பட்டது. ஊ.மங்கலம் போலீஸாா் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.