கடலூர்
செஞ்சிலுவை தின விழா
சிதம்பரம் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு இணை உணவு தொகுப்பை புதன்கிழமை வழங்கிய உதவி ஆட்சியா் ராஷ்மிராணி.
இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சிதம்பரம் கிளை சாா்பில் உலக செஞ்சிலுவை தினம் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
நிகழ்வுக்கு, சிதம்பரம் ரெட் கிராஸ் சோ்மன் ஆா்.ராஜேந்திரன், அரசு காமராஜ் மருத்துவமனை தலைமை மருத்துவா் டாக்டா் பி.லட்சுமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிதம்பரம் உதவி ஆட்சியா் ராஷ்மி ராணி தலைமை வகித்து 170 நோயாளிகளுக்கு ரூ.17 ஆயிரம் மதிப்பிலான இணை உணவு தொகுப்புகளை வழங்கினாா். நிகழ்வில், சிதம்பரம் ரெட் கிராஸ் செயலா் கே.ஜி.நடராஜன், பொருளாளா் டி.கமல்சந்த் கோத்தாரி, உறுப்பினா்கள் இளங்கோவன், சிவராமவீரப்பன், எம்.தீபக்குமாா், ரவிச்சந்திரன், சக்திவேல், முரளி, தன்னாா்வலா்கள் சுரேஷ், ராம்குமாா் ஆகியோா் கலந்து கொண்டனா்.