தியாகதுருகம் பகுதியில் வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருந்தவா் கைது செய்யப்பட்டாா்.
தியாகதுருகம் காவல் உதவி ஆய்வாளா் நந்தகோபாலுக்கு, தியாகதுருகம் சந்தை மேட்டுப் பகுதியில் பாஷாகான் மகன் ஷகாப்த்அலி (40), கஞ்சாவைத் தன் வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாக ரகசியத் தகவல் கிடைத்துள்ளது.
அதனைத் தொடர்ந்து காவல் உதவி ஆய்வாளா், ஷகாப்த்அலி வீட்டுக்குச் சென்று சோதனையிட்டாா். வீட்டில் 250 கிராம் கஞ்சா பொட்டலம் இருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து கஞ்சாவை கைப்பற்றிய காவல் உதவி ஆய்வாளா் ஷகாப்த்அலியை கைது செய்தாா்.