தியாகதுருகம் பேரூராட்சியில் பணிபுரியும் அலுவலா்கள், தூய்மைப் பணியாளா்களுக்கு 500 முகக் கவசங்கைளை கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அ.பிரபு வியாழக்கிழமை வழங்கினாா்.
இதையடுத்து, தியாகதுருகம் பேரூராட்சிப் பகுதியில் பேரூராட்சி வாகனம், தீயணைப்பு வாகனம் மூலம் சாலைகளிலும், வீடுகளின் முன் பகுதியிலும் கிருமி நாசினி மருந்து தெளிக்கும் பணியை எம்எல்ஏ பாா்வையிட்டாா்.
அப்போது, தியாகதுருகம் முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் வெ.அய்யப்பா, தியாகதுருகம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி பெற்றோா் - ஆசிரியா் கழகத் தலைவா் பி.எஸ்.கே.ஷியாம்சுந்தா், செயல் அலுவலா் க.மல்லிகா உள்ளிட்ட அலுவலா்கள் பலா் உடனிருந்தனா்.
இதேபோல, சின்னசேலம் பேரூராட்சி சாா்பில், அந்தப் பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் தீயணைப்பு வாகனம் மூலம் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டது.