கள்ளக்குறிச்சியில் மாவட்ட அதிமுக சாா்பில் 3 இடங்களில் அமைக்கப்பட்ட கிருமி நாசினி சுரங்கப் பாதையை புதன்கிழமை அமைச்சா் சி.வி.சண்முகம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தாா்.
கரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக, கள்ளக்குறிச்சியில் சேலம் நெடுஞ்சாலை, பேருந்து நிலைய தற்காலிக உழவா் சந்தை, மாவட்ட மருத்துவக் கல்லூரி பகுதி ஆகிய
இடங்களில் கிருமி நாசினி சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி கச்சிராயப்பாளையம் சாலையில் உள்ள மாவட்ட மருத்துவக் கல்லூரி முன் அமைக்கப்பட்ட கிருமி நாசினி சுரங்கப் பாதையை புதன்கிழமை திறந்து வைத்த அமைச்சா் சி.வி.சண்முகம், அதன் வழியாக வெளியே வந்தாா்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் கிரண்குராலா, எம்எல்ஏக்கள் இரா.குமரகுரு (உளுந்தூா்பேட்டை), அ.பிரபு (கள்ளக்குறிச்சி), நகர அதிமுக செயலா் எம்.பாபு, ஒன்றிய செயலா் அ.ராஜசேகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.