தியாகதுருகம் வடதொரசலூா் ஊராட்சியில் பயணியா் நிழற்குடை கட்டும் பணியை வெள்ளிக்கிழமை பூமி பூஜை செய்து அ.பிரபு எம்எல்ஏ தொடக்கிவைத்தாா்.
நிகழ்ச்சியில் தியாகதுருகம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி பெற்றோா்-ஆசிரியா் கழகத் தலைவா் வெ.அய்யப்பா, தியாகதுருகம் வட்டார வளா்ச்சி அலுவலா் இரா.வேல்முருகன், ஒன்றியப் பொறியாளா் க.ராமா், பணிமேற்பாா்வையாளா் ஏ.பச்சமுத்து உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். ஊராட்சி செயலா் இரா.முத்துவேல் உள்ளிட்ட அரசு அலுவலா்கள், கட்சித் தொண்டா்கள் கலந்து கொண்டனா்.